டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஓசூர் சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

News image
ஓசூர் சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல்
Updated On :17 அக்டோபர் 2020, 7:11 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மேஜைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரத்து 120 ரூபாயை பறிமுதல் செய்தனர்

தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஜுஜுவாடி என்ற இடத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் வாகனங்களை சோதனையிடவும், தற்காலிக பர்மிட் வழங்கவும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல சற்றுத் தொலைவில் சிப்காட் வளாகத்தின் அருகே தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களை தணிக்கை செய்து தற்காலிக பர்மிட் வழங்க ஒரு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே இரு மாநிலங்களுக்கு இடையே அதிகபட்சமான வாகனங்கள் இடம் பெயர்வது இந்த சோதனைச் சாவடிகள் வழியாகத்தான்,ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இதைக் கடக்கின்றன.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் ஒரு குழுவினர் இன்று அதிகாலை ஓசூர் செக்போஸ்ட்களுக்கு வந்தனர்.

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்தில் நுழையக்கூடிய சோதனைச்சாவடியில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 120 ரூபாயை மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இரவு பணிக்கு வந்த சில மணி நேரங்களில் இந்த செக்போஸ்டில் இருந்த ஆர்டிஓ அதிகாரிகள், ஊழியர்கள் வாங்கியுள்ள கணக்கில் வராத பணம் இவை.

இதையடுத்து இந்த செக்போஸ்ட்டில் பணியில் இருந்த மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் சுப்புரத்தினம், உதவியாளர் ராமலிங்கம் இருவரிடம் துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.