மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்: செஞ்சி மாணவி தற்கொலை முயற்சி 

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற செஞ்சியைச் சேர்ந்த  மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

News image
Updated On :17 அக்டோபர் 2020, 6:32 am

DIN

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற செஞ்சியைச் சேர்ந்த  மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜேந்திரா நகர் ஏழாவது தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் மகள் ரம்யா தேவி (வயது 19).

இவர் நிகழாண்டு செப்டம்பர் 13 இல் நடைபெற்ற, மருத்துவ படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதினார்.  இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது.

இதில், மாணவி ரம்யாதேவி 205 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

குறைவான மதிப்பெண் பெற்றுள்ளதால் மனமுடைந்த ரம்யாதேவி, சனிக்கிழமை காலை வீட்டிலிருந்த கொசு மருந்தை குடித்து விட்டார். 

உடனடியாக இவரை செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.