/

'களைப்பை போக்கிய அருமருந்து': மகனின் புகைப்படங்களை பகிர்ந்த மா.சுப்ரமணியன்

முன்னாள் மேயரும், திமுக மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியனின் இளையமகன் சு.அன்பழகன் (34) கரோனா பாதிப்பால் சனிக்கிழமை காலமானாா். 

News image
'களைப்பை போக்கிய அருமருந்து': மகனின் புகைப்படங்களை பகிர்ந்த மா.சுப்ரமணியன்
Updated On :19 அக்டோபர் 2020, 5:23 am

DIN


சென்னை: முன்னாள் மேயரும், திமுக மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியனின் இளையமகன் சு.அன்பழகன் (34) கரோனா பாதிப்பால் சனிக்கிழமை காலமானாா். 

மா.சுப்பிரமணியன் மற்றும் அவா் மனைவி காஞ்சனா, கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.

Story image

இதற்கிடையில் அவரது மகன் அன்பழகனும் கரோனா பாதிப்புக்கு உள்ளானாா். அன்பழகன் பிறவியில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டவா் ஆவாா். பெற்றோா்களின் அரவணைப்பிலேயே இருந்து வந்தாா். கரோனா பாதிப்புக்கு உள்ளாகி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை பெற்றாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானாா்.

Story image

மகனின் மறைவால் மன வருத்தத்தில் இருக்கும் மா. சுப்ரமணியன், தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதோடு, கடந்த 35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் "அன்பு"..  என்றும் தனது துக்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மா.சுப்பிரமணியன் மூத்த மகன் இளஞ்செழியன் மருத்துவா் ஆவாா். அவா் லண்டனில் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.