சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அனைத்து மண்டலங்களிலும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்குள் குறைந்துள்ளது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,93,299 ஆக உள்ளது. இவர்களில் 1,78,623 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சென்னையில் ஒட்டுமொத்தமாக 11,107 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கரோனா பாதித்தவர்களில் இதுவரை 3,569 பேர் பலியாகியுள்ளனர். கரோனா பாதித்த நோயாளிகளில் 62 சதவீதம் பேர் ஆண்கள், சுமார் 37 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
இதையும் படிக்கலாமே.. தமிழகத்தில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
கரோனா பாதித்த நோயாளிகளில் 50 - 59 வயதுக்குட்பட்டவர்களே அதிகம். இந்த வயதுடைய 18.54 சதவீதம் பேருக்கு கரோனா பாதித்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் 30 - 39 வயது மற்றும் 40 - 49 வயதுடையவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கத்தில் மட்டும் 900 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.