மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாளை அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை

பாளையங்கோட்டை அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை செய்த கும்பலை காவலர்கள் தேடி வருகின்றனர்.  

News image
கொலை செய்யப்பட்ட பரமசிவன்
Updated On :24 அக்டோபர் 2020, 7:20 am

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை செய்த கும்பலை காவலர்கள் தேடி வருகின்றனர்.  

திருநெல்வேலி மாவட்டம்,  பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி உடையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பரமசிவம் (48). இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கூலித் தொழிலாளியான பரமசிவன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பின்புறம் உள்ள செட்டில் உள்ள கட்டிலில் தூங்கியுள்ளார். 

இந்நிலையில், நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் பரமசிவம் தலையில் கல்லை போட்டு அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சனிக்கிழமை காலை அவரது மனைவி வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது பரமசிவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். 

உடனடியாக இதுகுறித்து பாளை. தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்கள் பரமசிவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பாளை. தாலுகா காவல்நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், பரமசிவன் காவல்துறைக்கு தகவல் அளிப்பராக இருந்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் யாரேனும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு முன்விரோதத்தில் நடந்தப்பட்ட கொலையா? என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.