டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மேட்டூா் அணை நீா்மட்டம் 100.08 அடியாக உயர்ந்தது

நிகழாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூா் அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 100.08 அடியாக உயர்ந்தது. 

News image
மேட்டூர் அணை
Updated On :25 அக்டோபர் 2020, 3:50 am

DIN

மேட்டூா்: நிகழாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூா் அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 100.08 அடியாக உயர்ந்தது. 

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,694 கன அடியிலிருந்து 20,298 கன அடியாக அதிகரித்துள்ளது.  

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 9,000 கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்காக நொடிக்கு 800 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது;  அணையின்  நீா் இருப்பு 64.94 டி.எம்.சி.யாக உள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 510 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 6,000 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,004 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,010 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.