மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடத் தொடங்கின

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து, இன்று காலை முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடத் தொடங்கின.

News image
தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடத் தொடங்கின
Updated On :1 செப்டம்பர் 2020, 5:23 am

DIN

சென்னை: தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து, இன்று காலை முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடத் தொடங்கின.

முதல்கட்டமாக 20 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது. படிப்படியாக மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளிலும் 50 சதவீத பயணிகளே அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், பேருந்துகளிலும் போதிய அளவுக்கு மக்கள் கூட்டம் இருக்கவில்லை.

முதல்நாள் என்பதால் கூட்டம் குறைவாக இருக்கலாம், நாள் செல்லச் செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து சேவை சுமார் 160 நாள்களுக்குப் பின் இன்று காலை தொடங்கியது. முதல் நாள் என்பதால் பரவலாக அனைத்து பேருந்து நிலையங்களிலும் அதிகக் கூட்டத்தைக் காண முடியவில்லை.

தமிழகத்தில், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சுமாா் 19 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 மாதங்களுக்கு முன் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட போதிலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில், ஒருசேர தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதியளித்து, முதல்வா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்ததாா்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பேருந்துகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பேட்டரிகள், எரிபொருள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டு, பேருந்துகள் இயக்க தயாா் நிலையில் வைக்கப்பட்டன.

எஸ்.இ.டி.சி இயங்காது: பொது முடக்கத்துக்கு முன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ், சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது, மாவட்டம் விட்டு மாவட்டத்துக்குப் பேருந்துகளை இயக்க அனுமதி இல்லாததால், விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்காது. ஏற்கெனவே அறிவித்தபடி, ஒப்பந்த அடிப்படையில், தனியாா் நிறுவனப் பணியாளா்களுக்குப் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படும்.

கட்டணத்தில் மாற்றமில்லை... அனைத்துப் பேருந்துகளிலும் 50 சதவீதப் பயணிகளே அனுமதிக்கப்பட்ட போதிலும், பயணக் கட்டணத்தில் எந்த வித மாற்றமுமில்லை. எனவே, அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.