தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி மாமியார், மருமகள் உயிரிழப்பு

அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கிய மருமகளைக் காப்பாற்றச் சென்ற மாமியார் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.

News image
அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி மாமியார், மருமகள் உயிரிழப்பு
Updated On :1 செப்டம்பர் 2020, 3:54 am

DIN

அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கிய மருமகளைக் காப்பாற்றச் சென்ற மாமியார் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆளப்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த மகாதேவன் மனைவி ராதிகா (31). 

இவர்கள் வீட்டு வளாகத்திலுள்ள கம்பிவேலியில் திங்கள்கிழமை இரவு பெய்த மழை காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.

இதையறியாமல் செவ்வாய்க்கிழமை காலை, ராதிகா கம்பி வேலியைத் தவறி தொட்டுள்ளார். மின்சாரம் தாக்கியுள்ளது. சப்தம் கேட்டு வந்த ராதிகாவின் மாமியார் ராஜகோகிலம் (65) மருமகளைக் காப்பாற்ற முயற்சித்து அவரும் மின் தாக்குதலில் சிக்கினார். இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.