திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கான விண்ணப்பங்களை திமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்.
நாளை வியாழக்கிழமை (செப்.3) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறும், வேட்புமனு திரும்பப்பெற செப்டம்பர் 5 ஆம் தேதி கடைசி நாளாகும் என தெரிவித்துள்ளார்.