ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 21,339 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 21,339 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
மேட்டூர் அணை
Updated On :4 செப்டம்பர் 2020, 4:00 am

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 21,339 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. 

நேற்று வியாழக்கிழமை காலை விநாடிக்கு 17,937 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு  21,339 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று வியாழக்கிழமை காலை 89.50 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 90.36 அடியாக உயர்ந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 9,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 53.06 டிஎம்சி ஆக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு உயரத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.