6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பா.ஜ.க.வுடன் தொடர்ந்து சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருகிறோம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

பா.ஜ.க.வுடன் தொடர்ந்து சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருவதாக  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

News image
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
Updated On :6 செப்டம்பர் 2020, 12:06 pm

DIN

பா.ஜ.க.வுடன் தொடர்ந்து சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருவதாக  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 

'கிராமங்களில் கடைக்கோடியில் இருக்கும் மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் 'சாட்டிலைட் வில்லேஜ்' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார். 

2021-ல் நடைபெறும் தர்ம யுத்தத்தில் அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும். இளைஞர்களின் எழுச்சி அதிமுக பக்கமே உள்ளது' என்று பேசியுள்ளார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளுமாறு ஹெச்.ராஜா தினமும் எங்களை அறிவுறுத்தி வருகிறார். பா.ஜ.க.வுடன் தொடர்ந்து சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருகிறோம்.

10 ஆண்டுகளாக மௌன விரதம் இருந்து வரும் மு.க. அழகிரி மௌனம் கலைத்தால்தான் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.