மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புறநகர் ரயில் சேவை எப்போது?

​முன்பதிவில்லாத பயணிகள் ரயில் சேவை தொடங்கியவுடன், புறநகர் ரயில் சேவை பற்றி முடிவெடுக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 3:59 pm

DIN


முன்பதிவில்லாத பயணிகள் ரயில் சேவை தொடங்கியவுடன், புறநகர் ரயில் சேவை பற்றி முடிவெடுக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை காணொலி மூலமாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜான் தாமஸ் இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது:

"முன்பதிவு பயணிகள் ரயில் சேவைப் போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுவதாக இந்திய ரயில்வே கொள்கை முடிவு எடுத்துள்ளது. நாடு முழுவதும் புறநகர் ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. முன்பதிவில்லாத பயணிகள் ரயில் சேவையைத் தொடங்குவது பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ரயில்வே அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் முடிவெடுக்கப்பட்டவுடன் அதற்கேற்ப ரயில் சேவைகள் தொடங்கப்படும்.

முன்பதிவில்லாத பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட பிறகே, புறநகர் ரயில் சேவை தொடங்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.