ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உத்தமபாளையத்தில் 171 நாள்களுக்குப் பின் மீண்டும் வாரச்சந்தை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் 171 நாட்களுக்குப்பின் மீண்டும் வாரச்சந்தை செயல்பட்டது.

News image

உத்தமபாளையத்தில் செயல்பட்ட வாரச்சந்தை

Updated On :9 செப்டம்பர் 2020, 8:43 am

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் 171 நாட்களுக்குப்பின் மீண்டும் வாரச்சந்தை செயல்பட்டது.

உத்தமபாளையம் பேரூராட்சியில் செயல்பட்ட வாரச்சந்தை புதன்கிழமை தோறும் செயல்படும். சந்தைக்கு சுற்றியுள்ள அனுமந்தன்பட்டி, க. புதுப்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், கோகிலாபுரம், ராயப்பன்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கி செல்வார்கள். ஆனால், கரோனா ஊரடங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 18ம் தேதிக்கு பின் 171 நாட்களாக செயல்படவில்லை.

இந்நிலையில், தமிழக அரசு பொது முடக்கத்தில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் உத்தமபாளையம் பேரூராட்சியில் மூடப்பட்டிருந்த வாரச்சந்தை இன்று புதன்கிழமை செயல்பட்டது. வழக்கமாக 250 கடைகளில்  கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின் 20 முதல் 30 கடைகளில் மட்டுமே வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்தனர் . அதேபோல பொது மக்கள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.