பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வேன்-கண்டெய்னர் லாரி மோதல்:  காய்கறி வியாபாரிகளான தந்தை-மகன் பலி

திருமங்கலம் அருகே வேன் கண்டெய்னர் லாரி மீது வியாழக்கிழமை அதிகாலை மோதியதில் காய்கறி வியாபாரிகளான தந்தை-மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
விபத்தில் உயிரிழந்த தந்தை பால்பாண்டி, மகன் தவமணி
Updated On :10 செப்டம்பர் 2020, 6:29 am

DIN


திருமங்கலம் அருகே வேன் கண்டெய்னர் லாரி மீது வியாழக்கிழமை அதிகாலை மோதியதில் காய்கறி வியாபாரிகளான தந்தை-மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உசிலம்பட்டி தாலுகா சடச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(55). இவரது மகன் தவமணி(21). இருவரும் காய்கறி வியாபாரிகள். இவர்கள் வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்றில் உசிலம்பட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி வியாழக்கிழமை அதிகாலை சென்றனர். வேன் மதுரை - நெல்லை நான்குவழிச் சாலை பகுதியில் ராயபாளையம் விலக்கு அருகே சென்றபோது திருப்பூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரியின்  பின்பக்கத்தில் வேகமாக மோதியது. 

Story image

கண்டைனர் லாரியின்  பின்பக்கத்தில் வேகமாக மோதிய வேன்

இதில், வேனின் முன்பகுதி முழுவதும் சேதமாகி அதில் பயணம் செய்த பால்பாண்டி மற்றும் அவரது மகன் தவமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.