நீட் தேர்வு: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம்
நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நாளை நடத்தப்படும் என திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.


நீட் தேர்வை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்களவை உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு அறிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக தோழமைக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாளை காலை 8 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வு பிரச்னை குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, நாடு முழுவதும் 154 நகரங்களில் உள்ள 3,842 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 1,17,990 போ் உள்பட இந்தியா முழுவதும் 15,97,433 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 14 நகரங்களில் 238 தோ்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
நீட் தேர்வு பயம் மற்றும் மன அழுத்தத்தால் தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...