தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுச்சேரியில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் கைது

புதுச்சேரியில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். 

News image

புதுச்சேரியில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள்

Updated On :16 செப்டம்பர் 2020, 6:24 am

DIN

புதுச்சேரியில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். 

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில், தற்காலிக(வவுச்சர்) ஊழியர்களாக பணிபுரிந்து வரும் 1,311 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, வவுச்சர் ஊழியர்கள் 50 பேர், புதன்கிழமை காலை புதுவை முதல்வர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை ஒதியன்சாலை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கும், ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.