3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

சிறப்பு ரயில்களில் பயணித்த 97 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி: பியூஷ் கோயல்

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மத்திய அரசு அறிவித்த பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 97 பேர் சிறப்பு ரயில்களில் பயணித்த போது மரணம் அடைந்துள்ளனர்.

News image

சிறப்பு ரயில்களில் பயணித்த 97 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி: பியூஷ் கோயல்

Updated On :19 செப்டம்பர் 2020, 11:07 am

PTI


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மத்திய அரசு அறிவித்த பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 97 பேர் சிறப்பு ரயில்களில் பயணித்த போது மரணம் அடைந்துள்ளனர்.

மே 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 வரை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணம் செய்த 97 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் அடைந்த விவகாரத்தை, மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

வெள்ளிக்கிழமை திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்தார்.

அதில், மாநில காவல்துறைகள் அளித்த புள்ளி விவரத்தின் அடிப்படையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணித்த 97 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநில காவல்துறை சார்பில் இயற்கைக்கு விரோதமான மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

தீவிர பொதுமுடக்கக் காலத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் மரணம் குறித்து புள்ளி விவரம் எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அளித்த பதில் கடும் விமரிசனங்களை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே அமைச்சர் இந்த பதிலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.