பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தில் 12,134 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,704 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 513 பேர் மருத்துவமனையிலும், 38 பேர் கோவிட் கேர் சென்டரிலும், 562 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி 500 பேருக்கு மேல் இம்மண்டலத்தில் பரிசோதனை செய்யப்படுகின்றனர். 7% குறைவாகவே தொற்று கண்டறியப்படுகிறது. சென்னையில் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இருந்த போதிலும், பொதுமக்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. கரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி 85,000-க்கும் மேல் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிக பரிசோதனைகளை நடத்துகிறது. கரோனா நோயாளிகளை ஆரம்பத்திலே கண்டறிவதால் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.