தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானலில் 4 இடங்களில் வாகனச் சோதனை: சுற்றுலாப் பயணிகள் வாக்குவாதம் 

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் சோதனைச் சாவடியில் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது.

News image

கொடைக்கானல் வெள்ளிநீர் அருவிப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் மருத்துவத்துறையினருக்கும்,சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம்

Updated On :26 செப்டம்பர் 2020, 10:17 am

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் சோதனைச் சாவடியில் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்றுச் செல்லலாம் என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்  வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் கொடைக்கானல் நுழைவு வாயிலான வெள்ளிநீர் வீழ்ச்சிப் பகுதியில் வழக்கமான சோதனை நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் மலைச் சாலையில் 4 இடங்களில் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. மீண்டும் சோதனைச் சாவடியில் உள்ள மருத்துவக் குழு, காவல் துறை ஆகியோர் நடத்தும் விசாரணையால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, அங்குள்ள அலுவலர்களிடம் வாக்கு வாதம் ஏற்படுகிறது 

இதனால் பாதிநேரம் சோதனையிடுவதிலேயே செல்வதால் சுற்றுலாப் பயணிகள், கொடைக்கானலில் இருக்கும் முக்கிய இடங்களை சுற்றி பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

வாகனங்களை சோதனையிடும் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளுடன் இணக்கமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் கொடைக்கானலுக்கு ஏன் வருகிறோம் என்ற மன நிலைக்கு தள்ளப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.