தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருச்சி அருகே வேன் கவிழ்ந்து பெண் ஒருவர் பலி; 18 பேர் காயம்

திருச்சி 16ஆம் நாள் காரியத்திற்காக நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்த வேன் கவிழ்ந்து பெண் ஒருவர் பலியானார். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

News image
திருச்சி அருகே விபத்துக்குள்ளான வேன்
Updated On :30 செப்டம்பர் 2020, 4:36 am

DIN

திருச்சி 16ஆம் நாள் காரியத்திற்காக நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்த வேன் கவிழ்ந்து பெண் ஒருவர் பலியானார். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இருந்து 18 பேர் ஸ்ரீரங்கத்தில் துக்க காரியம் செய்ய, வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்தனர். முசிறி கருப்பம்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது வளைவில் வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியைச் சேர்ந்த சம்பூர்ணம் (55) பலியானார். மேலும், உடன் பயணித்த 18 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி போலீஸார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.