மோடி வேண்டுகோளின்படி தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினிகாந்த்!

பிரதமர் மோடி வேண்டுகோளின்படி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் மெழுகுவர்த்தி ஏற்றி கைகளில் ஏந்தினார்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Updated on
1 min read

சென்னை: பிரதமர் மோடி வேண்டுகோளின்படி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் மெழுகுவர்த்தி ஏற்றி கைகளில் ஏந்தினார்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கரோனாவுக்கு எதிரான நமது வலிமையை உணா்த்தும் விதமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு விளக்கு அல்லது மெழுகுவா்த்தியை ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமையன்று விடியோ செய்தி மூலமாக அழைப்பு விடுத்தாா்.

பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க ஞாயிறு இரவு சரியாக ஒன்பது மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளிலும், கட்டங்களிலும் ஒளியேற்றினர். 

அவர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் வெளியே வந்து மெழுகுவர்த்தி ஏந்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com