சென்னை: சென்னையில் வியாழக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 156 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி கரோனா பாதிப்பு 149 ஆக இருந்தது.
திருவொற்றியூர் முதல் சோளிங்கநல்லூர் வரை 15 மண்டலங்களைக் கொண்ட சென்னையில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 43 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்த இடத்தில் திருவிக நகரில் 22 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 19 பேருக்கும் கரோனா பாதித்துள்ளது. அண்ணாநகரில் 15 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 13 பேருக்கும், தேனாம்பேட்டையில் 11 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெருங்குடியில் ஐந்து பேருக்கும், திருவொற்றியூர், வளசரவாக்கம், அடையாறு, பகுதிகளில் தலா நான்கு பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மணலி, அம்பத்தூர் பகுதிகளில் கரோனா நோயாளிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.