

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 2021 ஜூலை மாதம் வரை அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது.
அதேபோன்று அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவதும் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. முன்னதாக அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு சம்பளத்தை ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கரோனா பரவலினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயா்வை 2021 ஜூன் வரை நிறுத்தி வைக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.