தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நான்கு நாள்கள் முழு ஊரடங்கு முடிந்து கடைகளுக்குத் திரண்ட சென்னைவாசிகள்

கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சியில் கடந்த நான்கு நாள்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 6:19 am


கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சியில் கடந்த நான்கு நாள்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நான்கு நாள்கள் முழு ஊரடங்கு முடிந்து இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.

Story image

இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதலே காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. சாலைகளிலும், தெருக்களிலும் கூட ஏராளமான வாகனப் போக்குவரத்தைக் காண முடிந்தது.

கடைகளில் பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை விட்டு நிற்பதையும் காண முடிகிறது. சில பகுதிகளில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு பொருட்களை வாங்கிச் செல்வதும் தொடர்ந்து தான் வருகிறது.

Story image

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளிலும் 4 நாள்கள் ஊரடங்கு முடிந்து இன்று கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்றாலும், மளிகைப் பொருட்கள் தீர்ந்து போய்விடுமோ என்ற அச்சத்தில் காலையில் இருந்தே ஏராளமான மக்கள் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.