சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் கடுமையாக இருக்கும் நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 27 ஆயிரமாக உள்ளது. இவர்களில் 14 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கும் நிலையில், 220 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கரோனா உறுதியானதை அடுத்து, அந்த மாவட்டத்தில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,176 ஆக உயர்ந்துள்ளது.