கரோனா நோயாளிகளுக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 112 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசு சார்பில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரோனா சிகிச்சைக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 112 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல ஏதுவாக வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையுடன், உடனடி ஆம்புலன்ஸ் சேவை பெற 044-4006 7108 என்ற எண்ணை தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.