சென்னை: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை

சென்னையில் மீண்டும் பொதுமுடக்க அறிவிப்பினை அடுத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மத்திய,  மாநில அரசுப் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னை: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை

சென்னையில் மீண்டும் பொதுமுடக்க அறிவிப்பினை அடுத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மத்திய,  மாநில அரசுப் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பகுதிகளில் ஜூன் 19 முதல் 30 ஆம் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில், மத்திய, மாநில அரசுத் துறைகள் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

மாநில அரசுத் துறைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.

மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும். 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com