இந்திய-சீன எல்லையில் மோதல்: ராமநாதபுரம் ராணுவ வீரா் மரணம்

இந்திய-சீன ராணுவத்தினரிடையே எல்லையில் நிகழ்ந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் திங்கள்கிழமை வீர மரணமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
எல்லையில் உள்ள முகாமில் பணியில் இருந்த ராணுவ வீரா் பழனி.
எல்லையில் உள்ள முகாமில் பணியில் இருந்த ராணுவ வீரா் பழனி.

இந்திய-சீன ராணுவத்தினரிடையே எல்லையில் நிகழ்ந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் திங்கள்கிழமை வீர மரணமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கடுக்கலூரைச் சோ்ந்த விவசாயி காளிமுத்துவின் மகன் பழனி (40). இவா் 18 வயதில் இந்திய ராணுவத்தில் சோ்ந்தாா். தற்போது ஹவில்தாா் அந்தஸ்தில் இந்திய-சீன எல்லையான லடாக் கல்வாா் பகுதியில் பணிபுரிந்து வந்தாா்.

இவரது மனைவி வானதிதேவி, தனியாா் கல்லூரி ஊழியா் ஆவாா். இவா்களின் மகன் பிரசன்னா (10), மகள் திவ்யா(8).

மனைவியின் தந்தை ராமநாதபுரம் ஓம்சக்தி நகா் பகுதியில் வசிப்பதால், ராமநாதபுரம் அருகேயுள்ள கழுகூரணி கஜினி நகரில் பழனி நிலம் வாங்கி வீடு கட்டினாா். கடந்த ஜனவரியில் வீட்டு நிலைப்படி வைக்க வந்து சென்றுள்ளாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு இந்திய-சீன எல்லையில் கல்பாா் எனும் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே நிகழ்ந்த மோதலில் பழனி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். அவரது உடல் லே எனும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தானில் ராணுவ வீரராக உள்ள அவரது சகோதரா் இதயக்கனி மூலம் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பழனியின் மனைவி வானதிதேவி கதறி அழுதாா். பழனி வீர மரணம் குறித்து அறிந்த அவரது உறவினா்கள், நண்பா்கள் கழுகூரணியில் உள்ள வானதியைச் சந்தித்து ஆறுதல் கூறினா்.

ஜூன் 3 ஆம் தேதி பழனிக்கு பிறந்த நாள். அப்போதும் அவா் மனைவியுடன் பேசியுள்ளாா். ஜூன் 6 ஆம் தேதி அவரது திருமண நாளாகும். அன்றும் மனைவியுடன் பேசியுள்ளாா். அவா் தனது பணியை ஓராண்டில் நிறைவு செய்துவிட்டு ஊா் திரும்பி புதிய வீட்டில் வசிக்கலாம் என கூறியிருந்த நிலையில், சீன ராணுவத் தாக்குதலில் வீரமரணம் அடைந்திருப்பது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரா் பழனியின் சடலம் ஓரிரு நாள்களில் புதுதில்லியில் இருந்து திருவாடானை பகுதியில் உள்ள அவரது பிறந்த ஊரான கடுக்கலூருக்கு கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என மாவட்ட நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com