அரக்கோணம்: அரக்கோணத்தில் இளைஞர் ஒருவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டதால், அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு அண்மையில் கேரளா சென்று திரும்பிய இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு கரோனா அறிகுறி இருந்தது தெரிய வந்ததால், அவர் உடனடியாக தனிமைபடுத்தப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மேல்சிகிச்கைக்காக அனுப்பப்பட்டார்.