

அரக்கோணம்: அரக்கோணத்தில் இளைஞர் ஒருவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டதால், அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு அண்மையில் கேரளா சென்று திரும்பிய இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு கரோனா அறிகுறி இருந்தது தெரிய வந்ததால், அவர் உடனடியாக தனிமைபடுத்தப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மேல்சிகிச்கைக்காக அனுப்பப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.