கரோனா அச்சறுத்தலால் தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் மழலையர் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் இதுதொடர்பாக புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், 'புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் அரசு தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எந்தவொரு பிராந்தியத்திலும் ஏற்றத் தாழ்வின்றி இந்த பணிகள் நடைபெற்றுவருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் ப்ரீ.கே.ஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 16-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது' என்றார்.