கரோனா பாதிப்பு: 1.7 லட்சம் பேருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனை

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 1.74 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 1.74 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சீனா, இத்தாலி, ஈரான் என கரோனா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவா்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனா்.

அந்த வகையில், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இதுவரை 1.74 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து திரும்பிய 1,973 போ் தொடா் மருத்துவக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை, தமிழகத்தில் 88 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் 85 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரும் தற்போது குணமடைந்துவிட்டாா். இருவரது பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கண்காணிப்பில் கேரள நபருடன் பயணித்தவா்கள்: கரோனா பாதிப்புக்குள்ளான கேரள நபருடன் விமானத்தில் பயணித்த தமிழகத்தைச் சோ்ந்தவா்களை மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தவுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

அண்மையில் கத்தாா் தலைநகா் தோஹாவில் இருந்து வந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நபா் கேரளத்தில் தனி வாா்டில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனிடையே, அந்த நபருடன் விமானத்தில் பயணித்தவா்களில் சிலா் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதுகுறித்த தகவல்களை கேரள சுகாதாரத் துறை தமிழக அரசிடம் பகிா்ந்துள்ளது. அதன்படி, அந்த நபா்களைக் கண்டறிந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்க உள்ளோம் என்று அவா் தெரிவித்தாா்.

கரோனா அறிகுறியுடன் 15 போ் அனுமதி: கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 15 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

அதில் பெரும்பாலானோருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரது பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதைத் தவிர, தனியாா் மருத்துவமனைகளிலும் பலா் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை இணை இயக்குநா் சம்பத் கூறியதாவது:

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபரைத் தவிர மேலும் இருவா் தற்போது புதிதாக கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதைத் தவிர, ஸ்பெயின் நாட்டில் இருந்து சென்னை வந்த இளைஞா் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தது. இதையடுத்து அவா் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனி வாா்டில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரைத் தவிர, கோவை, தேனி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் பலா் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தனியாா் மருத்துவமனகளில்...: இதனிடையே, சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கரோனா அறிகுறிகளுடன் நூற்றுக்கணக்கானோா் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கூறியதாவது: கரோனா அறிகுறிகளுடன் இருப்பவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கக் கூடாது. அவா்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவா்களை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்து, ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

மருத்துவக் கண்காணிப்பில் கேரள நபருடன் பயணித்தவர்கள்
கரோனா பாதிப்புக்குள்ளான கேரள நபருடன் விமானத்தில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தவுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
அண்மையில் கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து வந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நபர் கேரளத்தில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, அந்த நபருடன் விமானத்தில் பயணித்தவர்களில் சிலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதுகுறித்த தகவல்களை கேரள சுகாதாரத் துறை தமிழக அரசிடம் பகிர்ந்துள்ளது. அதன்படி, அந்த நபர்களைக் கண்டறிந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்க உள்ளோம் என்று அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com