தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் ஏற்கனவே ஒருவர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்


சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே ஒருவர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கரோனா பாதித்த நபர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் இரண்டாவது நபருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதித்த இளைஞர் 20 வயதுடையவர். அவர் ரயில் மூலம் தில்லியில் இருந்து சென்னை வந்துள்ளார். அந்த இளைஞர் யாருடன் தொடர்பில் இருந்தார்  என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றும், பொதுமக்கள் தேவையில்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் கரோனா அறிகுறி மற்றும் கரோனா பாதித்தவருடன் இருந்தவர்கள் என்று 2,984 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com