தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதுபற்றி தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி:
தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 527 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 12,773 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 527 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 377 பேர் ஆண்கள், 150 பேர் பெண்கள்.
இன்று 30 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஒருவர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய தேதியில் 2,107 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 50 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் (அரசு - 36, தனியார் - 14) உள்ளன.
தமிழகத்தில் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை:
மொத்தம் பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகள்: 1,62,970
மொத்தம் பரிசோதிக்கப்பட்டுள்ள நபர்கள்: 1,53,489
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


