

சென்னை: சென்னையை அடுத்த மாதவரத்தில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றி வந்த இரண்டு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆவின் பால் பண்ணை ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று இரவு முதல் ஆவின் பால் பண்ணை ஊழியர்கள் பணிக்கு வர அச்சம் தெரிவித்துள்ளனர்.
லாரிகளில் பால் பாக்கெட்டுகளை ஏற்றும் தொழிலாளர்கள் பலரும் இன்று பணிக்கு வராததால், 14 லாரிகளில் பால் பாக்கெட்டுகள் ஏற்பட்ட நிலையில், 20 லாரிகளில் லோடு ஏற்றப்படவில்லை.
மாதவரம் ஆவின் பால் பண்ணையில் இருந்து சுமார் 2.38 லட்சம் பால் பாக்கெட்டுகள் ஒவ்வொரு நாளும் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கும் பால் பாக்கெட்டுகள் விநியோகிகப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.