சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த காவல் துணை ஆணையருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்திலேயே சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த காவல் துணை ஆணையருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த காவல் துணை ஆணையருக்கு கரோனா பாதிப்பு
Updated on
1 min read


சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த காவல் துணை ஆணையருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதில் முன்னின்று பணியாற்றிய காவலர்கள் சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎஸ் அதிகாரிக்கும் கரோனா உறுதி செய்ப்பட்டுள்ளது.

கரோனா உறுதி செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி, அவ்வப்போது கோயம்பேடு காய்கறி சந்தைப் பகுதியில் ஆய்வுக்குச் சென்று வந்ததும், அவர் வசிக்கும் அண்ணா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com