சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த 2,04,862 பேரில் இதுவரை 1,95,291 பேர் குணமடைந்துள்ளனர். இது 95 சதவீதமாகும்.
கரோனா பாதித்தவரகளில் 3716 பேர் அதாவது 1.81 சதவீதம் பேர் பலியாகிவிட்டனர். தற்போது, 5,844 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இது 3 சதவீதமாகும்.
சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணாநகரில் 435 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அண்ணா நகரில் மட்டுமே 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகறிர்கள். அதேவேளையில், திருவிக நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் மட்டுமே 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
மிகக் குறைந்த அளவாக மணலியிலும், சோழிங்கநல்லூரிலும் 100-க்கும் குறைவானோர் சிகிச்சையில் உள்ளனர்.
மண்டலவாரியாக நிலவரம்: