தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம்: வானிலை ஆய்வு மையம்


சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை அய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிகக் கனமழையும், 15 மாவட்டங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 18 செமீ மழையும், காஞ்சிபுரத்தில் 16 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும்,  விழுப்புரம், தஞ்சை, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், மதுரை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com