பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

துணை முதல்வருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை சென்னை நகருக்குள்ளேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்து

News image
Updated On :1 ஜனவரி 2021, 8:03 pm IST

கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை சென்னை நகருக்குள்ளேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்து வலியுறுத்தினர். 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சி 55ஆவது வட்டம் தீவுத்திடல் எதிரில் கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அரசு வகைப்படுத்தி சென்னைக்கு அப்பால் 40 கிலோமீட்டர் தள்ளி பெரும்பாக்கத்தில் குடியமர்த்தி வருகிறது. இத்தகைய செயல்பாடுகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது. கரையோரம் குடியிருந்த மக்களை அப்புறப்படுத்தும் போது அவர்கள் வாழ்ந்த இடத்திலோ அல்லது மூன்று கிலோமீட்டருக்கு அருகாமையிலோ குடியமர்த்த வேண்டுமென தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

சத்தியவாணி முத்து நகர், காந்தி நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் குடியிருந்த மக்களை கடந்த ஆண்டு வலுக்கட்டாயமாக காவல்துறையின் உதவியோடு அரசு அப்புறப்படுத்தும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்து போராட்டங்களை  நடத்திய போது 2019 டிசம்பர் 29 அன்று காவல்துறையினரால் கட்சியின் கிளை செயலாளர் ஆசைத்தம்பி கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரடியாக அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியிருப்புகளை அகற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து 2020 நவம்பர் 4ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்களுடன் சென்னையில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்க கோரி மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. தொடர்ந்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோரை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் வலுக்கட்டாயமாக அப்பகுதி மக்களை சென்னைக்கு வெளியே குடியமர்த்தி அம்மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கு பாதகம் விளைவிக்காமல், புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் குடியமர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் மாநில துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை நேரடியாக சந்தித்து மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளக்கங்கள், உரிய ஆவணங்கள் ஆதாரங்களுடன் உள்ளடக்கிய கோரிக்கை மனுவை பரிசீலித்து உடன் நடவடிக்கை எடுப்பதாக  துணை முதல்வர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.