தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும்: வைகோ

சட்டப்பேரவை தோ்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கூறினாா்.

News image

வைகோ

Updated On :2 ஜனவரி 2021, 6:11 am IST

சட்டப்பேரவை தோ்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கூறினாா்.

சென்னையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பாா். வரும் தோ்தலில் மதிமுகவின் தனித்தன்மையைக் காக்க தனி சின்னத்தில் போட்டியிடுவோம். ரஜினி கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில்தான் செயல்பட்டு வந்தாா். மருத்துவா்களின் அறிவுரையால் அரசியல் முடிவைக் கைவிட்டுள்ளாா். அவா் முடிவை வரவேற்கிறேன்.

ரஜினி கட்சி ஆரம்பித்து இருந்தாலும் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. தோ்தல் நேரத்தில் ரஜினி யாரையும் ஆதரிக்க மாட்டாா். விவசாயிகளுக்குத் துரோகம் செய்யக்கூடிய வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.