தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சில இடங்களில் 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News image

கோப்புப்படம்

Updated On :2 ஜனவரி 2021, 6:15 am IST

தமிழகத்தில் சில இடங்களில் 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஜனவரி 2, 3-ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஜனவரி 4-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வட வானிலையும் நிலவும். ஜனவரி 5-ஆம்தேதி ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாா் அவா்.

மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 90 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 80 மி.மீ., திருச்சி மாவட்டம் சமயபுரம், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் தலா 70 மி.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூா், திருவாரூா் மாவட்டம் குடவாசல், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தலா 60 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, தஞ்சாவூா் மாவட்டம் பூதலூா், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், ஈரோடு மாவட்டம் கொடுமுடி, ராமேஸ்வரத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.