திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி குறைவு 

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார நிலையத்தில் மின்சார உற்பத்தி, சனிக்கிழமை 70 மெகாவாட்டாக  குறைந்தது.

News image

லோயர் கேம்பில் மின்சார உற்பத்தி குறைந்தது

Updated On :2 ஜனவரி 2021, 6:01 pm IST

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார நிலையத்தில் மின்சார உற்பத்தி, சனிக்கிழமை 70 மெகாவாட்டாக  குறைந்தது.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. வியாழக்கிழமை அணையிலிருந்து விநாடிக்கு 822 கன அடியாக வெளியேறிய நீர், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், விநாடிக்கு, 778 கன அடியாக வெளியேற்றப்பட்டது. 

இதன் மூலம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில், முதல் மின்னாக்கியில் 41 மெகாவாட் மின்சாரமும், மூன்றாவது மின்னாக்கியில் 29 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது. 

கடந்த டிச.26ல் மூன்று மின்னாக்கிகளில் 85 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.30 அடியாகவும், நீர் இருப்பு 2687 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 789 கன அடியாகவும், நீர் வெளியேற்றம், 778 கன அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.