நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வை ஞாயிற்றுக்கிழமை 4360 பேர் எழுதினர். 3381 பேர் பங்கேற்கவில்லை.
துணை ஆட்சியர்,காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப்-1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் 25 மையங்களில் இத்தேர்வை எழுத 7741 பேர் விண்ணப்பித்திருந்தர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வை 4360 பேர் எழுதினர். 3381 பேர் பங்கேற்கவில்லை.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலுசாமி, மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தெருவை ஒட்டி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











