திருச்சிராப்பள்ளி-பாலக்காடு, விழுப்புரம்-திருப்பதி, ஈரோடு-சென்னை உள்ளிட்ட 6 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருச்சி-பாலக்காடு: திருச்சிராப்பள்ளியில் இருந்து தினசரி மதியம் 1 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06843) புறப்பட்டு, அதேநாள் இரவு 8.35 மணிக்கு பாலக்காடு டவுணை அடையும். இந்தரயிலின் சேவை ஜனவரி 6-ஆம்தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, பாலக்காட்டில் இருந்து தினசரி காலை 6.30 மணிக்கு விரைவு சிறப்பு ரயில் (06844) புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.50 மணிக்கு திருச்சிராப்பள்ளியை அடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 7-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
விழுப்புரம்-திருப்பதி:
விழுப்புரத்தில் இருந்து தினசரி அதிகாலை 5.25 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06854) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12.20 மணிக்கு திருப்பதியை சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 6-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, திருப்பதியில் இருந்து தினசரி நண்பகல் 12.35 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06853) புறப்பட்டு, அதேநாள் இரவு 8.15 மணிக்கு விழுப்புரத்தை அடையும்.
ஈரோடு-சென்னை சென்ட்ரல்:
ஈரோட்டில் இருந்து தினசரி இரவு 9 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(02650) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்தரயிலின் சேவை ஜனவரி 10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி இரவு 10.40 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02649) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு ஈரோட்டை சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 11-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுதவிர, எா்ணாகுளம்-கேஎஸ்ஆா் பெங்களூரு, திருவனந்தபுரம்-ஹஸ்ரத் நிஜாமுதின், ஆலப்புழா-கண்ணூா் ஆகிய வழித்தடங்களிலும் சிறப்புரயில்கள் இயக்கப்படவுள்ளன. முழுவதும் முன்பதிவு பெட்டிகைளைக் கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமா்ப்பிப்பு

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



