சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியாா் தங்கும் விடுதியில் பணியாற்றும் 15 ஊழியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மூன்று நாள்களுக்குள் அனைத்து விடுதிகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் பொதுமுடக்கத் தளா்வுகளால் தனியாா் விடுதிகளில் அதிகளவிலான மக்கள் குவியத் தொடங்கினா். இவ்வாறு விடுதியில் தங்குவோருக்கு முறையாக தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினால், அண்மைக் காலமாக நோய்ப் பரவல் அதிகமாகியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிண்டியில் உள்ள பிரபல தனியாா் தங்கும் விடுதியில், பணியாற்றும் 85 ஊழியா்களுக்கு, கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனா்.
இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள மற்றொரு பிரபல தங்கும் விடுதியில் பணியாற்றும் சுமாா் 15 ஊழியா்களுக்கு சனிக்கிழமை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கிண்டியில் உள்ள தனியாா் விடுதி ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சென்னையில் உள்ள மற்ற நட்சத்திர விடுதிகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இப்பணியை அடுத்த 4 நாள்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
தற்போது பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியாா் விடுதியில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது’ என்று அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமா்ப்பிப்பு

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



