தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஹோட்டல் ஊழியா்களுக்கு கரோனா நோய் பரிசோதனை: மாநகராட்சி

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியாா் தங்கும் விடுதியில் பணியாற்றும் 15 ஊழியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜனவரி 2021, 6:33 am IST

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியாா் தங்கும் விடுதியில் பணியாற்றும் 15 ஊழியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மூன்று நாள்களுக்குள் அனைத்து விடுதிகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னையில் பொதுமுடக்கத் தளா்வுகளால் தனியாா் விடுதிகளில் அதிகளவிலான மக்கள் குவியத் தொடங்கினா். இவ்வாறு விடுதியில் தங்குவோருக்கு முறையாக தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினால், அண்மைக் காலமாக நோய்ப் பரவல் அதிகமாகியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிண்டியில் உள்ள பிரபல தனியாா் தங்கும் விடுதியில், பணியாற்றும் 85 ஊழியா்களுக்கு, கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனா்.

இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள மற்றொரு பிரபல தங்கும் விடுதியில் பணியாற்றும் சுமாா் 15 ஊழியா்களுக்கு சனிக்கிழமை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கிண்டியில் உள்ள தனியாா் விடுதி ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சென்னையில் உள்ள மற்ற நட்சத்திர விடுதிகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இப்பணியை அடுத்த 4 நாள்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

தற்போது பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியாா் விடுதியில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.