நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கோவிந்தப்பேரியில் பி.ஹெச். பாண்டியன் மணிமண்டபம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தப்பேரியில் நடைபெற்ற முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்றனர்.

News image

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தப்பேரியில் நடைபெற்ற முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்றனர்.

Updated On :4 ஜனவரி 2021, 6:29 pm IST


திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கோவிந்தப்பேரியில் கட்டப்பட்டுள்ள தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.ஹெச்.பாண்டியன் மணிமண்டபம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தப்பேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.ஹெச்.பாண்டியன் நினைவு மண்டபம் திறப்பு விழா திங்கள் கிழமை நடைபெற்றது.

மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சிலையை முதல்வர் பழனிசாமியும் திறந்து வைத்தனர்.

முன்னதாக இதில் பங்கேற்க சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்த தமிழக முதல்வரும்,  துணை முதல்வரும் பின்னர் அங்கிருந்து காரில் திருநெல்வேலிக்கு வந்தனர். அங்கு மாவட்ட  அதிமுக சார்பில் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா தலைமையில் கட்சியினரும், பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர். மேலப்பாளையம் முதல் கருங்குளம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு சாலையோரம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். இதையடுத்து திறந்த ஜீப் ஒன்றில் முதல்வரும், துணை முதல்வரும் சென்று வரவேற்பை ஏற்றனர். தொடர்ந்து மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.