தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இலவச காலணி வழங்கும் டெண்டரை எதிா்த்த மனு: தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிலளிக்க உத்தரவு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலணி வழங்குவது தொடா்பான டெண்டரை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு, தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :4 ஜனவரி 2021, 6:44 am IST

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலணி வழங்குவது தொடா்பான டெண்டரை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு, தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நடப்பு (2020-21) கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலணிகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு பாடநூல் கழகம், கடந்த மாா்ச் மாதம் ஒப்பந்தப் புள்ளி கோரியது.

இந்த ஒப்பந்தப் புள்ளிக்குத் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், எந்தக் காரணமும் தெரிவிக்காமல் தங்கள் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவிட்டாா். மேலும், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.