அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

பல்லடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு 

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் இரண்டு நாள் மாநில மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது. 

News image

மாநாட்டில் பொதுச்செயலாளர் பாரி வேலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசினார்.

Updated On :8 ஜனவரி 2021, 4:51 pm IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் இரண்டு நாள் மாநில மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது. 

மாநாட்டில் சங்க கொடியை ஏற்றிவைத்து, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் சண்முகம் வரவேற்றார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் மாநிலத் தலைவர் ராமமூர்த்தி துவக்க உரையாற்றினார். 

வேலை அறிக்கையைப் பொதுச்செயலாளர் பாரி தாக்கல் செய்தார். மாநிலப் பொருளாளர் விஜயபாஸ்கர் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த மாநாட்டில் முன்னாள் மாநிலத் தலைவர்  சுப்பிரமணியம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கௌரவ தலைவர் பரமேஸ்வரன், திருப்பூர் இந்தியத் தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் தங்கராஜ், மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.