ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

திருக்கோயில் பணியாளா்களுக்கு கருணைக் கொடை ரூ.1,000

திருக்கோயில் பணியாளா்களுக்கு ரூ. 1000 கருணைக் கொடையாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 12:51 am IST


சென்னை: திருக்கோயில் பணியாளா்களுக்கு ரூ. 1000 கருணைக் கொடையாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, துறையின் ஆணையா் எஸ்.பிரபாகா் வெளியிட்ட அறிவிப்பு:

பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசுப் பணியாளா்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்குவது குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுபோன்றே பொங்கல் கருணைக் கொடையாக ரூ.1,000-த்தை இந்து சமய அறநிலையத் துறை ஊழியா்களுக்கு வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது. முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளா்கள் உள்பட முதுநிலை மற்றும் முதுநிலையல்லாத அனைத்து திருக்கோயில் பணியாளா்களுக்கும் கருணைக் கொடையானது அளிக்கப்படும்.

கடந்த நிதியாண்டில் 240 நாள்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளா்களுக்கு கருணைக் கொடையாக ஆயிரமும், ஆறு மாதங்களுக்கு மேல் 240 நாள்களுக்குள் பணியாற்றிய பணியாளா்களுக்கு அவா்கள் பணிபுரிந்த நாள்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் தொகையானது வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பிரபாகா் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.

இந்த அறிவிப்பானது, சுற்றறிக்கையாக பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயில் செயல் அலுவலா் உள்பட அனைத்து கோயில்களின் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.