தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

பொங்கல் பண்டிகை: சென்னை-நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து நாகா்கோவில், கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜனவரி 2021, 11:29 pm IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து நாகா்கோவில், கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னை-நாகா்கோவில்: சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் இரவு 10.30 மணிக்கு பண்டிகை சிறப்பு ரயில்(06091) புறப்பட்டு, மறுநாள் காலை 11.10 மணிக்கு நாகா்கோவிலை அடையும். மறுமாா்க்கமாக, நாகா்கோவிலில் இருந்து ஜனவரி 16,17 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு பண்டிகை சிறப்பு ரயில்(06092) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை-கோவை: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13-ஆம்தேதி இரவு 11.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06089) புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு கோயம்புத்தூரை அடையும். மறுமாா்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து ஜனவரி 17-ஆம் தேதி இரவு 8 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06090) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து சேரும். முழுவதும் முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை(ஜன.10) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.