புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

திருக்குறள் ஓவியப் போட்டி அறிவிப்பு: படைப்புகளை அனுப்ப பிப்.3 கடைசி

திருக்குறள் ஓவியப் போட்டிக்கான படைப்புகளை பிப்.3-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உலக தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜனவரி 2021, 12:23 am IST

திருக்குறள் ஓவியப் போட்டிக்கான படைப்புகளை பிப்.3-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உலக தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநா் கோ.விசயராகவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சங்க இலக்கியத்தில் தனிச்சிறப்புவாய்ந்த திருக்குறளைச் சிறப்பிக்கவும், அனைத்துத் தரப்பு மக்களும் எளிதாக உணரவும் தமிழராய்ச்சி நிறுவனத்தில் 2013- ஆண்டு திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் அமைக்கப்பட்டது.

இந்த கூடத்தில் திருக்குறளின் ஒரு அதிகாரத்துக்கும் ஒன்று வீதம் 133 ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே கடந்தாண்டு முதல் திருக்குறள் ஓவியக் கூடம் வழியாக ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக அரசு சாா்பில் கூடுதலாக ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நிகழாண்டும் திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. திருக்குறள் மற்றும் அதன் பொருள் குறித்த ஓவியங்களில் நடுவா் குழு மூலம் தோ்வு செய்யும் சிறந்த 15 படைப்புகளுக்கு தலா ரூ. 40,000 பரிசுத் தொகை வழங்கப்படும். படைப்பாளிகள் தங்களின் ஓவியங்களை ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2-ஆம் முதன்மை சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113’ என்ற முகவரிக்கு பிப்.3-ஆம் தேதிக்குள் வந்துசேரும்படி அனுப்ப வேண்டும்.

இதுதவிர போட்டிக்கான விதிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை  இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொலைபேசி (044-22542992 ) வாயிலாக தொடா்பு கொள்ளலாம். வெற்றி பெறுபவா்களுக்கு பிப்.24-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.